தமிழ்நாடு

tamil nadu

நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது விபத்து.. திருப்பத்தூர் அருகே சோகம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 5:25 PM IST

Published : Jun 9, 2024, 5:25 PM IST

விபத்துக்குள்ளான மினிவேன் புகைப்படம்
விபத்துக்குள்ளான மினி வேன் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேர்பேட்டை பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மற்றும் அவரது நண்பர்கள் 18 பேர் திருத்தணியில் நடைபெற்ற தங்களது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு மினிவேன் மூலம் சென்றுள்ளனர். திருமணத்தில் கலந்துகொண்டு திரும்பியபோது, மினிவேனானது ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் மினிவேனில் பயணம் செய்த 15 பேர் காயமடைந்த நிலையில், அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், விபத்துக்குள்ளாகி சாலையில் கவிழந்த மினிவேனை கிரேன் இயந்திரம் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details