சென்னை: மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் இருந்து முடிச்சூர் வரை இளைஞர் ஒருவர் விலை உயர்ந்த (Harley Davidson) பைக்கை பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக ஓட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியானது. அதில் விலை உயர்ந்த பைக்கில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர் (SILENCER) பொருத்திக் கொண்டும், தலை கவசம் அணியாமல் விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டிச் சென்றது பதிவாகி இருந்தது.
Harley Davidson பைக் ஓட்டி அச்சத்தை ஏற்படுத்திய இளைஞர்.. ரூ.12 ஆயிரம் அபராதம்!
Published : Aug 4, 2024, 2:25 PM IST
Harley Davidson பைக் ஓட்டி சென்ற இளைஞர் (CRedits - ETV Bharat Tamil Nadu)
இது தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பைக் இன்சூரன்ஸ் 3 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அதிக சத்தம் எழுப்பி, வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டிய இளைஞருக்கு தாம்பரம் போக்குவரத்து போலீசார் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.