சென்னை: போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, சீரடி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 4 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்கள்:
வழித்தடம் | நேரம் | விமானம் |
சென்னை - சீரடி | பிற்பகல் 2.40 | ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானம் |
சென்னை - டெல்லி | இரவு 9.05 | விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் |
சீரடி - சென்னை | பகல் 1.50 | ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானம் |
டெல்லி - சென்னை | இரவு 8.20 | விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் |
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் டெல்லி, சீரடி ஆகிய வருகை, புறப்பாடு என 4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், போதிய பயணிகள் இல்லாமல் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.