தஞ்சாவூர்:விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க தஞ்சையில் சிறப்புத் தீர்மானம்!
Published : Aug 31, 2024, 4:13 PM IST
தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் இறைவன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எம்பி முரசொலி, எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட பொது உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதில் முக்கியமாக, கடந்த 2021ஆம் ஆண்டு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சருக்கு உறுதுணையாக பணியாற்றிட துணை முதல்வராக வேண்டும் என கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.