காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கத்தில் 640 கோடியில் கைத்தொலைபேசி மற்றும் பிற மின்னணு சாதனங்களின் மூடிமறைக்கும் கண்ணாடிகள் தயாரிக்கப்படும் ஆலை அமைக்கப்பட உள்ள நிலையில், சிப்காட் தொழிற் பூங்கா சார்பில் பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் ஒப்புதலுக்காக அனுப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் நவீன கண்ணாடி உற்பத்தி ஆலை திட்டம்: அரசிடம் அனுமதி கேட்கும் தனியார் நிறுவனம்!
Published : Sep 17, 2024, 5:59 PM IST
இந்த தொழிற்சாலையில் நவீன முறையில் முன்-கவர் கண்ணாடி (Front cover glass) தயாரித்து, இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள் மற்றும் கைபேசி உற்பத்தியாளர்களுக்கு வழங்க பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி தற்போது ஆலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஒப்புதலுக்காக அனுப்புவைக்கப்பட்டுள்ளது.