நீலகிரி:நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வந்ததால், மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும், ராட்சத மரங்கள் விழுந்தும் தண்டவாளத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
Published : Sep 1, 2024, 3:05 PM IST
மீண்டும் தொடங்கிய ஊட்டி மலை ரயில் சேவை.. உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்!
இதனைத் தொடர்ந்து, கடந்த 25 நாட்களாக ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனால் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று சீரமைக்கும் பணிகள் முடிவடைந்து மீண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கிச் செல்லும் மலை ரயில் சேவை துவங்கியது. இதில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.