தமிழ்நாடு

tamil nadu

CEIR போர்டல் மூலம் 309 மொபைல்போன்கள் கண்டுபிடிப்பு.. உரிமையாளரிடம் ஒப்படைத்த எஸ்.பி.! - 309 mobile phones discovery

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 9:41 PM IST

எஸ்.பி. உரிமையாளரிடம் மொபைல்போனை வழங்கிய காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

அரியலூர்: இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் சஞ்சய் குமார் உத்தரவின்படியும், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் மற்றும் சரக காவல்துறை துணைத் தலைவர் மனோகர் அறிவுறுத்தலின்படியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் இணைய குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி காணாமல் போன மொபைல் போன்களை CEIR PORTAL- மூலமாக, கண்டுபிடிக்க ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் உள்ள வரவேற்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், கடந்த மூன்றுமாத காலமாக CEIR PORTAL மூலமாக ரூ. 41.5 லட்சம் மதிப்பிலான 309 மொபைல்போன்களை கண்டுபிடித்துள்ளனர். அவை இன்று (திங்கட்கிழமை) மாவட்ட காவல் அலுவலகம் கொண்டுவரப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அந்தோணி ஆரி அவர்கள (இணைய குற்றப்பிரிவு), சிவக்குமார் (தலைமையிடம்), காவல் ஆய்வாளர்கள் செல்வகுமாரி, கார்த்திகேயனி (இணைய குற்றப்பிரிவு), காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details