தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாய், மகன் தற்கொலை வழக்கு... நிதி நிறுவன ஊழியர் கைது - VELLORE MOTHER SON SUICIDE

Financial Institution Employee Arrest: பேரணாம்பட்டு அருகே கடன் பிரச்சனை காரணமாக தாய், மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியரை போலீசார் இன்று கைது செய்தனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 8:17 PM IST

சித்தார்த்தாசங்கர்
கைதீன சித்தார்த்தாசங்கர் (CREDITS- ETV Bharat Tamil Nadu)

வேலூர்:வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அன்வர் பாஷா (55) என்பவரது மனைவி மும்தாஜ் (48), இவர்களது மகன் இம்ரான் (26). இவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் வங்கி மூலம் கடன் பெற்றதாகவும், கடனின் தவணைத் தொகையைச் செலுத்திவதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தனியார் வங்கி ஊழியர்கள் கடனை திரும்பச் செலுத்தும்படி தொந்தரவு செய்ததாகவும், அதனால் மும்தாஜ் மற்றும் அவரது மகன் இம்ரான் மனஉளைச்சலுக்கு ஆளானதாக கூறப்பட்ட நிலையில், தாயும் மகனும் நேற்று முன்தினம் (ஜூலை 6) தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு. தற்கொலைக்கு முன்பாக அவர்கள் உருக்கமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று அந்த தனியார் நிறுவன ஊழியர் சித்தார்த்தாசங்கர் (29) என்பவரை பேரணாம்பட்டு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:துரத்திய தவணை.. தாயும் மகனும் எடுத்த விபரீத முடிவு!

ABOUT THE AUTHOR

...view details