வேலூர்:சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர், கோயம்புத்தூர் மற்றும் விஜயவாடா ஆகிய முக்கிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
இந்நிலையில் இன்று ( ஆகஸ்ட் 6) ரயிலில் பயணம் செய்தபடி அதிகாரிகள் தண்டவாளத்தின் உறுதித் தன்மை மற்றும் எந்தெந்த இடத்தில் தண்டவாளத்தில் வளைவுகள் உள்ளது. ஏதேனும் இடத்தில் வளைவாக உள்ள தண்டவாளத்தை நேராக வேண்டி உள்ளதா மற்றும் சிக்னல்கள் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்ததாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனை ஓட்டத்தின்போது, சென்னையில் காலை 10:30 மணிக்கு புறப்பட்ட ரயில் பகல் 12:30 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தை அடைந்தது.