தஞ்சாவூர்: 16 வயது சிறுமியை தனியான சந்திக்க வேண்டும் என அழைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைதான சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது தோழியைச் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (20) என்ற நபருடன் சிறுமிக்குப் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து, இருவரும் செல்போன் மூலமாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த இளைஞர் சிறுமியிடம் தனிமையில் சந்தித்துப் பேச வேண்டும் என அழைத்ததாகவும், அதனை நம்பிய சிறுமி அரவிந்தை சந்திக்க, அப்பகுதியில் உள்ள சவுக்கு தோப்பிற்குத் தனியாகச் சென்றதாகவும், அப்போது இளைஞர் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் சீண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, அரவிந்தின் நண்பரான சரண் (20) என்பவரும் சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.