தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் விநியோகம் செய்வதில் ஏற்பட்ட தகராறு.. பூந்தமல்லி அருகே இருவருக்கு அரிவாள் வெட்டு! - water suppliers attacked - WATER SUPPLIERS ATTACKED

Water suppliers attacked in Poonamallee: சென்னை பூந்தமல்லி அருகே குடிநீர் விநியோகம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ஊராட்சி மன்றத் தலைவியின் உறவினரைக் கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் விநியோகப்பதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு அரிவாள் வெட்டு
குடிநீர் விநியோகப்பதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு அரிவாள் வெட்டு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 11:14 AM IST

Updated : Apr 23, 2024, 12:58 PM IST

குடிநீர் விநியோகப்பதில் ஏற்பட்ட தகராறில் இருவருக்கு அரிவாள் வெட்டு

சென்னை:பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(32). இவர் தனது நண்பர் ஜெயக்குமார் என்பவருடன் இணைந்து சென்னீர்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வார்டுகளில் டிராக்டர் மூலம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளை சில வாரங்களாக செய்து வந்தனர்.

இந்த நிலையில் சென்னீர்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் சேர்ந்த கோட்டீஸ்வரி அன்பு. இவரது மருமகன் மணிகண்டன்(35), அதே பகுதியில் சில வருடங்களாக டிராக்டர் மூலம் குடியிருப்புகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருவதாகவும், தற்போது வெங்கடேசன் டிராக்டர் மூலம் தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்து நிலையில், இருவருக்கும் மத்தியில் பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அலுவலகத்தில் இருந்த வெங்கடேசனை, மணிகண்டனின் மற்றும் அவரது நண்பர்கள் சென்று வெங்கடேசன் மற்றும் ஜெயக்குமாரை நேற்று முன்தினம் கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் காயம் அடைந்த இருவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து, மூன்று பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே, இச்சம்பவத்திற்கு காரணமாக இருந்தாகக் கூறப்படும் அதிமுக ஊராட்சி மன்ற தலைவியின் மருமகன் மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்யாமல் இருப்பதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என வெங்கடேசனின் உறவினர்கள் ஆவடி - சென்னீர்குப்பம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட வெங்கடேசனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை அடுத்து அம்மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையும் படிங்க:நெல்லையில் திருமண வீட்டாருக்கும், சாவு வீட்டாருக்கும் மோதல்; 7 பேர் காயம்.. வீடியோ வைரல்!

Last Updated : Apr 23, 2024, 12:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details