மதுரை:திண்டுக்கல் - திருச்சி ரயில் பாதை பிரிவில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி செங்கோட்டையில் இருந்து டிசம்பர் 12, 14, 17, 28, 31 ஆகிய நாட்களில் காலை 07.05 மணிக்கு புறப்பட வேண்டிய மயிலாடுதுறை விரைவு ரயில் (16848), நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 12 அன்று புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை விரைவு ரயில் (16352), குருவாயூரிலிருந்து டிசம்பர் 11, 13, 16, 27, 30 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128), கன்னியாகுமரியில் இருந்து டிசம்பர் 14, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கொல்கத்தா ஹௌரா விரைவு ரயில் (12666), நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 31 அன்று புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை விரைவு ரயில் (16340) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும்.
நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 14, 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரயில் (16354) திருச்சி வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மயிலாடுதுறையிலிருந்து டிசம்பர் 14 அன்று புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் (16847),
கச்சக்குடாவில் இருந்து டிசம்பர் 13 அன்று புறப்பட வேண்டிய நாகர்கோவில் சிறப்பு ரயில் (07435), சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 14 அன்று புறப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரயில் (16127), பனாரஸிலிருந்து டிசம்பர் 29 அன்று புறப்பட வேண்டிய கன்னியாகுமரி தமிழ்ச்சங்கம் விரைவு ரயில் (16368) ஆகியவை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.