சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது புதிய அறிவிப்புகளை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்டார்.
வீடற்ற பழங்குடியினருக்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு.. சட்டப்பேரைவையில் வெளியான 19 புதிய அறிவிப்புகள்! - TN Assembly Meeting 2024 - TN ASSEMBLY MEETING 2024
TN Assembly Meeting 2024: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, 15க்கும் மேற்பட்ட புதிய அறிவிப்புகளை ஆதி திராவிடர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்டார்.
![வீடற்ற பழங்குடியினருக்கு ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு.. சட்டப்பேரைவையில் வெளியான 19 புதிய அறிவிப்புகள்! - TN Assembly Meeting 2024 அமைச்சர் கயல்விழி செல்வராஜ் புகைப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/25-06-2024/1200-675-21796071-thumbnail-16x9-ky.jpg)
அமைச்சர் கயல்விழி செல்வராஜ் புகைப்படம் (credits - Kayalvizhi Selvaraj X Page)
Published : Jun 25, 2024, 10:51 PM IST
ஆதி திராவிடர் நலத்துறை புதிய அறிவிப்புகள்:
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ரூ.15 கோடி ஒதுக்கீட்டில் புதிய விடுதிகள் கட்டுதல்.
- விடுதி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த சமையலறை மூலம் உணவு வழங்குதல் மற்றும் அமுத சுரபி திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- விடுதி மாணவர்களுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் படுக்கை உபகரணங்கள் அடங்கிய பெட்டகம் வழங்குதல்.
- உண்டி உறைவிட பள்ளிகளை பழங்குடியினர் தேவைகளின் அடிப்படையில் ரூ.13 கோடி ஒதுக்கீட்டில் மறு சீரமைத்தல்.
- பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயலும் மாணவர்களின் தனி திறனை வளர்த்துக் கொள்ள திறன் சார்ந்த திட்டங்கள்.
- உயர் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உயர்திறன் ஊக்கத்திட்டத்திற்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
- முழு நேர முனைவர் பட்டப்படிப்பிற்கான கல்வி ஊக்க தொகை திட்டத்தில் பயன் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
- தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டத்திற்கு ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- பழங்குடியினர் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- புதிய பொருளாதார முன்னேடுப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- முதலிப்பாளையம் மற்றும் ஈங்கூர் தொழிற்பேட்டை அலகுகளை ரூ.50 கோடி மதிப்பீட்டில் புனரமைத்தல்.
- வீடற்ற பழங்குடியினருக்கு ரூ.70 கோடி நிதியில் வீடுகள் கட்டித் தருதல்.
- பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தன்னிறைவு அடையச் செய்தல்.
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்திற்கான நெறிமுறை மற்றும் பயிற்சிக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- பழங்குடியின மக்களின் குடியிருப்புகளை இணைப்பதற்காக அணுகுசாலை வசதிகள் ரூ.50கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்துதல்.
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களை தொழில் முனைவோராக ஊக்குவிக்கும் வகையில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்துதல்.
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் வாழ்வியல் விழா ரூ.3 கோடியில் நடத்தப்படும்.
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்களின் தரவுகளை ரூ.1.50 கோடி செலவில் மின் பதிப்பாக்கம் செய்தல்.
இதையும் படிங்க:தரைப்பாலங்கள் முதல் நகரும் படிக்கட்டு வரை.. ரூ.1,000 கோடியில் புதிய அறிவிப்புகள்.. முழு விவரம் இதோ! - TN ASSEMBLY Session 2024