தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; 8 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது! - TIRUPPUR minor girl sexual abuse - TIRUPPUR MINOR GIRL SEXUAL ABUSE

Tiruppur Gang Rape Case: திருப்பூரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேர் புகைப்படம்
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேர் புகைப்படம் (credit to Etv Bharat tamil nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 9:09 PM IST

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த மார்ச் 9ஆம் தேதி கோயில் விழாவில் கலந்து கொண்ட சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக மணிகண்டன், பிரபாகரன், தினேஷ், சதீஷ், பாலு, மோகன், நந்தகுமார் மற்றும் நவீன்குமார் ஆகிய எட்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எட்டு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நகலை காங்கேயம் மகளிர் போலீசார் கோவை மத்தியச் சிறையில் அதற்கான ஆணையை வழங்கியதாக, மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு! - Elephant Died By Electrocution

ABOUT THE AUTHOR

...view details