சென்னை: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே மத்திய அரசை வலியுறுத்தி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. மேலும், தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தின் நிறுவனத்தலைவர் சகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இவர்கள் மட்டும் அல்லாது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்லப் பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளர் அந்தரிதாஸ் உள்ளிட்டோர் இந்த போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநிலத் தலைவர் வெள்ளைச்சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, "கட்டண சேனல்கள் அதிகபட்சமாக 19 ரூபாயாக தங்களது சேனல் விலையை நிர்ணயித்ததை குறைத்து ரூ.5ஆக மாற்றி அமைக்க வேண்டும்; கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு விதிக்கப்படும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்; கட்டண சேனல்கள் ஆண்டுதோறும் தங்கள் சேனல்களுக்கான விலையை ஏற்றிக் கொள்ளலாம் என்கிற அனுமதியை உடனடியாக ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இதையும் படிங்க:செவிலியர் அல்லாதோரை பணியில் அமர்த்தலாமா? - எம்ஆர்பி செவிலியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு!