மயிலாடுதுறை: பருவம் தவறி கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துள்ளது. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் முழுவதும் மழை நீரில் தேங்கி அழுகியுள்ளது. மழை விட்டு இரண்டு நாட்களாகியும் தண்ணீர் வெளியேறாததால் நெற்பயிர்கள் அழுகியதுடன், துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள விவசாயிகள், சுமார் 1,70,000 ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி செய்துள்ளனர். இந்த நெற்பயிர்கள் முற்றி அறுவடைக்கு தாயர் நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பரும மழை தவறி பெய்த கனமழையின் காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, கீழையூரைச் சேர்ந்த விவசாயி பாண்டிதுரை, “தரங்கம்பாடி தாலுகா கீழையூர் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கரில் விவசாயிகள், சம்பா தாளடி சாகுபடி செய்திருந்தனர். பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்ததால், விவசாயிகள் அறுவடை பணிகளை தொடங்கினர். சுமார் ஐந்து ஏக்கரில் அறுவடை நடைபெற்றிருந்த நிலையில், அறுவடை தொடங்கிய முதல் நாளிலேயே பருவம் தவறி கனமழை பெய்துள்ளது.
சேதமடைந்த நெற்பயிர்கள்: