தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கைது செய்ய வலியுறுத்தி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்! - Salem Periyar University protest

Salem Periyar University: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்ய வேண்டும் என பல்கலைக்கழக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Salem Periyar University
சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 9:19 PM IST

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கைது செய்ய வலியுறுத்தி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுக்குள்ளான பதிவாளர் தங்கவேலுவை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கடந்த மாதம் 2 முறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால், தங்கவேலுவிற்கு பணி ஓய்வு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனைக் கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும், பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்கலைக்கழக நுழைவாயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு துணை வேந்தரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், பல்கலைக்கழகங்களில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தினர்.

இது குறித்து தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் இளங்கோவன் கூறியதாவது, "பணி நியமன முறைகேடுகள், சமூக நிதி மறுப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து ஏவியும், அவர் சார்புடைய மக்கள் போராட்டங்களை நடத்தியும், இந்த பல்கலைக்கழக நிர்வாகம் செவி சாய்க்க மறுக்கிறது. கேட்டால் துணைவேந்தர் ஜெகநாதன் இது தன்னாட்சி பெற்ற நிறுவனம் என சொல்கிறார். நான் நினைத்ததைச் செய்வேன். நினைத்ததை முடிப்பவன் நான்.

பல்கலைக்கழக துணைவேந்தர் அரசு பணத்தில், அரசு செலவில், பல்கலைக்கழக செலவில் பங்களாவிலிருந்து கொண்டு அரசு போடக்கூடிய உத்தரவுகளை நான் ஏற்க மாட்டேன் என்கிறார். அரசு உத்தரவு என்றால், ஒரு தனி நபர் உத்தரவு கிடையாது.

சமூக நிதியைச் செயல்படுத்துங்கள். எங்கள் பணி நியமனத்தில் பாரபட்சம் காட்டாதீர்கள். இந்த பல்கலைக்கழகத்தில் வேலை செய்கின்ற அனைத்து பணியாளர்களையும் நிரந்தரப்படுத்துங்கள். எல்லோருக்கும் தகுதி இருக்கிறது. தகுதி இருந்தும் 20 ஆண்டுகளாக தினக்கூலிகளாக இருக்கின்றார்கள்” என்று கூறினார்.

மேலும், துணைவேந்தர் ஜெகநாதன் பல்கலைக்கழக விதிகளை மீறி வர்த்தக ரீதியாக நிறுவனம் தொடங்கியதாக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம்! என்ஐஏ வெளியிட்ட புகைப்படங்களால் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details