தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சைபர் கிரைம் மோசடியில் இத்தனை கோடி இழப்பா?.. வெளியான அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 9 மாதத்தில் 91 ஆயிரத்து 161 புகார்கள் பெறப்பட்டு, ரூ.526 கோடி முடக்கப்பட்டுள்ளதாக மாநில சைபர் குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2024, 7:58 AM IST

கோப்புப்படம்
கோப்புப்படம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பொதுமக்கள் சைபர் கிரைம் மோசடியில் சிக்கி பணத்தை இழந்ததாக இந்தாண்டு, இதுவரை 91 ஆயிரத்து 161 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சைபர் குற்றங்கள்: அதில், சமூகத்தில் கணினிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதால் சைபர் கிரைம் குற்றங்கள் ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சைபர் குற்றங்களான மென்பொருள் தாக்குதல்கள், இணைய நிதி மோசடிகள், KYC மோசடி, கிரிப்டோகரன்சி மோசடிகள், டிஜிட்டல் கைது போன்றவை மிகவும் அதிகமாக நிகழ்கின்றன.

சைபர் குற்றங்களில் குற்றவாளிகள் யார் என்பது தெரிவதில்லை. இது அரசு வணிக முதல் சாதாரண குடிமக்கள் வரை அனைத்து தரப்பினரையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இதையடுத்து உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தால் உருவாக்கப்பட்ட CFCFRMS, டிஜிட்டல் வங்கி Credit/Debit card பயன்பாடு, பணம் செலுத்துதல் ஆகியவற்றால் ஏற்படும் நிதி இணைய மோசடிகள் மற்றும் பண இழப்புகளை விரைவாகப் புகாரளிக்க உதவுகிறது.

அவசரக்கால எண்: சைபர் மோசடி தொடர்பாக 108, 112, 1930 ஹெல்ப்லைன் எண்கள் மூலம் விரைவாக CFCFRMS-இல் புகார் செய்வதால், மோசடி குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள் தாமதமின்றி முடக்கப்பட்டு, மோசடி செய்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இணையப் புகார்களை பதிவு செய்ய பாதிக்கப்பட்டவர்கள் யாரும் நிலையத்திற்குச் செல்ல தேவையில்லை. எந்த நேரமும் தாமதமின்றி புகார்கள் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் அல்லது 1930 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

இதையும் படிங்க:பெண் கழுத்தறுத்து கொலை.. நகைகளுடன் தப்பிய மர்ம நபர்கள்.. திருவாரூரில் நடந்த கொடூரம்..!

நடப்பாண்டில் (2024) ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை சைபர் மோசடியில் சிக்கி பொதுமக்கள் ரூ.1,116 கோடி இழந்துள்ளனர். அதில் ரூ.526 கோடி மோசடி நபர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து முடக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.48 கோடி திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய பணத்தை இழந்ததாக இந்தாண்டு இதுவரை 91,161 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற சைபர் மோசடிகளில் உடனடி புகார் தெரிவித்தால் விரைவில் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்க முடியும்.

சைபர் கிரைமில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் யாரையும் கைது செய்ய முடியாது. எனவே, நீங்கள் கைது செய்யப்பட்டதாக யாராவது தொலைபேசி மூலம் கூறினால் தயவு செய்து பீதி அடைய வேண்டாம். பணம் செலுத்த வேண்டாம். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களால் பரிந்துரைக்கப்பட்டாலும், Telegram அல்லது WhatsApp-இல் உள்ள தெரியாத குழுக்களில் சேர வேண்டாம்.

கிளிக் செய்வதற்கு முன் இணைப்புகளைச் சரிபார்க்கவும், உண்மையான URL-ஐக் காண மின்னஞ்சலில் உள்ள எந்த இணைப்புகளிலும் (கிளிக் செய்யாமல்) உங்கள் சுட்டியை நகர்த்தவும். சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால் கிளிக் செய்ய வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details