சென்னை:வரும் 3 மாதங்களில் இன்னும் அதிகமான மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் 30 இணைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மங்கல நாண் எடுத்து கொடுத்து திருமணத்தை இன்று நடத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து புதுமண தம்பதிகளுக்கு 4 கிராம் பொன் தாலி மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, வெட் கிரைண்டர், மிக்சி, குக்கர், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும் அவர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இன்று மிக மிக முக்கியமான நாளாகும். சிலர் காதலர் தினத்தை கொண்டாட கூடாது என்பார்கள். காதலர் தினத்தை கொண்டாடாமல் இருக்க முடியுமா? இன்று மட்டும் அல்ல ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான். இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொரு இணையர்களும் நல்ல காதலர்களாக நண்பர்களாக இருக்க வேண்டும்.