தமிழ்நாடு

tamil nadu

நல்லாசிரியர் விருது பரிசுத்தொகையை பழங்குடியின பெண் குழந்தைகள் நலனுக்காக கொடுத்த கோபிநாத்! - national teachers award 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2024, 4:21 PM IST

National Teachers Award: அதிக சமூகப் பணிகளையும், கல்விப் பணிகளையும் தொடர்ந்து செய்வேன். நான் பெற்ற பரிசுத்தொகையை ராஜாகுப்பம் பகுதியில் உள்ள பழங்குடியின பெண் குழந்தைகளின் நலனுக்காக நிரந்தர வைப்பு கணக்கில் வைக்க உள்ளேன் என தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கோபிநாத் தெரிவித்துள்ளார்.

நல்லாசிரியர் விருது பெற்ற கோபிநாத்
நல்லாசிரியர் விருது பெற்ற கோபிநாத் (Image Credit - ETV Bharat Tamilnadu)

வேலூர் : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ராஜாகுப்பம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் கடந்த 2009ம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியராக கோபிநாத் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு 2024ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த செப் 5ம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கையால் தேசிய நல்லாசிரியர் விருதினை கோபிநாத் பெற்றார்.

ஆசிரியர் கோபிநாத் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர், தனது சொந்த ஊரான குடியாத்தத்திற்கு இன்று வருகை தந்த கோபிநாத்திற்கு, உறவினர்கள் சக ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கோபிநாத், "தேசிய நல்லாசிரியர் விருது அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனிவரும் காலங்களில், மாணவர்கள் இன்னும் எளிமையாக கல்வி கற்க ஆர்வம் ஏற்படும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நல்லாசிரியர் விருது பெற்றவர்களோடு பிரதமர் நரேந்திர மோடி பேசும்பொழுது இந்த விருது பெற்றதோடு நின்று விடாமல் தொடர்ந்து பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அவர் சொன்னது போலவே, அதிக சமூகப் பணிகளையும், கல்விப் பணிகளையும் தொடர்ந்து செய்வேன்.

நான் பெற்ற பரிசுத்தொகையை ராஜாகுப்பம் பகுதியில் உள்ள பழங்குடியினர் பெண் குழந்தைகளின் நலனுக்காக நிரந்தர வைப்பு கணக்கில் வைக்க உள்ளேன். இந்திய நாட்டிலுள்ள பல கோடி ஆசிரியர்கள் மத்தியில் நான் விருது விருது பெற்றுள்ளேன். ஒவ்வொரு ஆசிரியர்களும் விருது பெறக்கூடிய ஆசிரியர்களே. ஆசிரியர் பணி என்பது தன்னை அர்ப்பணிக்க கூடிய பணி. இந்த விருது குழந்தை நயத்துடன் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்" என கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :வீட்டு வாசலில் நின்ற டூவிலரை திருட முயற்சி.. குறைத்துக் காட்டிக் கொடுத்த நாய்.. சிக்கியவருக்கு தர்ம அடி! - Youth arrest for Two Wheeler Theft

ABOUT THE AUTHOR

...view details