தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”கள்ளச்சாராய உயிரிழப்புக்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தான் காரணம்"- நாகை மாலி! - kallakurichi illicit liquor issue

kallakurichi illicit liquor issue : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தான் காரணம் என்று கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ நாகை மாலி தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 7:37 PM IST

கருணாபுரத்தில் நிலவும் இறுக்கமான சூழல்
கருணாபுரத்தில் நிலவும் இறுக்கமான சூழல் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழக தலைமைச் செயலகத்தில் இன்று கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உயிரிழப்பு தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "கடந்த 19ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் இறந்து உள்ளனர்.

இது ஒரு துயரமான சம்பவமாக தமிழ்நாட்டு மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இது விரும்பக்கூடாத ஒரு நிகழ்ச்சி. இந்த கள்ளச்சாராய உயிரிழப்புக்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தான் இதற்கு காரணம் என்று நாங்கள் பார்க்கிறோம். இந்த கள்ளச்சாராயம் இருக்கக்கூடிய இடம் என்பது காவல் நிலையத்திற்கும், கள்ளக்குறிச்சிக்கும் மையப் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு இடம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளச்சாராயம் விற்பனை கொடி கட்டி பறப்பதாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.

உயிரிழந்த குடும்பத்திற்கு உடனடியாக ரூ.10 லட்சம் வழங்கியதும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கியிருப்பதும் ஒரு நல்ல விஷயம். ஆனால், அது மட்டும் போதாது நிரந்தரமாக மனிதனின் வாழ்க்கைக்கு தமிழக அரசு வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும்.

சாராய வியாபாரத்திற்கு மறைமுகமாக அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் ஆணையர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கொலை குற்ற வழக்கில் பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசி உள்ளோம். அதிமுக ஒரு மிகப்பெரிய கழகம் அவர்கள் இன்று கவலையுடன் இந்த பிரச்னையை சட்டமன்றத்தில் இயற்றி இருக்க வேண்டும். ஆனால், வழக்கம் போல வெளிநடப்பு செய்வதை போல என்றும், இந்த துயரமான சம்பவத்திலும் அவர்கள் வெளிநடப்பு செய்தது இந்த சமூகத்தின் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது" என்று பேசினார்.

இதையும் படிங்க:சாமானியரின் பைக் சாவியை பிடுங்கிச் சென்ற கடற்படை வாகன ஓட்டுநர்! வைரலாகும் வீடியோ - Navy VAN DRIVER Issue VIDEO

ABOUT THE AUTHOR

...view details