தமிழ்நாடு

tamil nadu

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்? - அமைச்சர் சேகர்பாபு சொன்ன அப்டேட்! - Minister Sekar Babu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 1:56 PM IST

Minister Sekar Babu: சென்னையை அடுத்த முடிச்சூர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, வரும் மார்ச் மாதத்திற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

அமைச்சர் சேகர்பாபு பேட்டி
அமைச்சர் சேகர்பாபு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:சென்னையை அடுத்த முடிச்சூர் பகுதியில் வெளிவட்ட சாலையில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். ஆம்னி பேருந்து டிரைவர்கள் ஓய்வெடுக்கும் அறை, உணவு அருந்தும் இடம், கழிவறை வசதிகள், குளியலறை கட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்த அமைச்சர் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அமைச்சர் சேகர்பாபு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், “கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த ஆட்சி காலத்தில் சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டு வந்த பேருந்து நிலையத்திற்கு தேவையான அனைத்து பணிகளையும் தற்போது செய்து வருகிறோம்.

அந்த வகையில் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்காக முடிச்சூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில் 40 கோடி ரூபாய் செலவில் பல்வேறு வசதிகளுடன் ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஆம்னி பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறேன்.

அதேபோல் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் 655 ஏக்கர் பரப்பளவில் உள்ள வண்டலூர் வெளிவட்ட சாலையில் நான்கு இடங்களில் உடற்பயிற்சி கூடம், விளையாட்டு பூங்கா, நடைப்பயிற்சி பூங்கா கட்டப்பட்டு வருகிறது. அதனையும் ஆய்வு செய்துள்ளோம். கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளை விரைவாக முடிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலமாக ரயில்வே துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் ரயில் நிலைய பணிகள் முடிவடையும் என்று ரயில்வே துறை உறுதி அளித்துள்ளது” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:"மோடியின் ஆட்சியில் இந்தியா விரைவில் 3வது வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக மாறும்"- வெங்கையா நாயுடு! - Former VicePresident Venkaiah Naidu

ABOUT THE AUTHOR

...view details