ஈரோடு: புதிய திராவிடக் கழகம் மற்றும் கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நலச் சங்கத்தின் சமூக நீதி மாநில மாநாடு பெருந்துறை விஜயமங்கலம் சோதனை சாவடி அருகே நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் முத்துசாமி, மதிவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் மதிவேந்தன், "திராவிடம் என்றாலே அனைவரையும் ஒருங்கிணைப்பது என்பது பொருள். கலைஞர் மூலம் வேட்டுவ கவுண்டர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, வேலை வாய்ப்பு உட்பட பல்வேறு வாய்ப்புகள் பெற்று வருகிறார்கள். பிரிவுகளை ஓரம் கட்டிவிட்டு அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்" என்று பேசினார்.
இதன் தொடர்ச்சியாக, புதிய திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் ராஜ் கவுண்டர் பேசுகையில், "நாங்கள் எந்த சாதிக்கும் எதிரானவர்கள் இல்லை. தமிழகத்தில் பாஜக வராது. துரோகத்தின் உச்சம் தான் எடப்பாடி பழனிச்சாமி. தங்கமணி மற்றும் வேலுமணி போன்ற மணிகளை வைத்துக் கொள்ளையடித்தவர் எடப்பாடி பழனிசாமி.