மதுரை: திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், “பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு, வருடம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கிரிவலப் பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.
ஆக்கிரமிப்புகள் காரணமாக, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.
ஏற்கனவே, இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், “பழனி கிரிவல வீதியில் உள்ள மடங்கள் தொடர்ந்து செயல்படலாம்.