சென்னை: சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஜலீல் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள் உளவியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளார். சிக்னல்களில் வெப்பத்தை தணிக்க பசுமை பந்தல் அமைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக கடற்கரை, பூங்காக்களை நாடும் மக்களை இரவு 9.30 மணிக்கு மேல் காவல்துறையினர் துரத்தி விடுவதாக மனுவில் தெரிவித்துள்ளார். கடற்கரை, பூங்காக்களுக்கு வரும் மக்களை இரவு வரை இருக்க அனுமதிக்கக் கோரி டிஜிபிக்கும், மாநகர காவல் ஆணையருக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.