தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நில அபகரிப்பு புகார்; திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ நல்லதம்பி பதிலளிக்க உத்தரவு - Tirupathur DMK MLA Nallathambi - TIRUPATHUR DMK MLA NALLATHAMBI

Madras High Court: நில அபகரிப்புக்கு உடந்தையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ நல்லதம்பி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 7:23 PM IST

சென்னை: நில அபகரிப்பு குறித்து திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “தங்களது நிலத்திற்கு அருகில் உள்ள நிலத்தை வாங்கிய பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரேமா என்பவர், தங்களது நிலத்துக்கும் சேர்த்து பட்டா கோரியுள்ளார். இதனை எதிர்த்து தாசில்தாரரிடம் அளித்த புகார், வருவாய் அதிகாரிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ நல்லதம்பி தலையிட்டதால், தங்களது நிலத்தை பிரேமாவுக்கு சாதகமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, திமுக எம்எல்ஏ நல்லதம்பியை எதிர் மனுதாரராக இணைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் நல்லதம்பியை இணைத்து மனுத் தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.

இதனையடுத்து, இந்த மனு குறித்து திமுக எம்எல்ஏ நல்லதம்பி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:பழனி கிரிவலப்பாதை; அப்புறப்படுத்தாமல் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details