சென்னை: விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நைஜீரியா நாட்டை சேர்ந்த எக்விம் கிங்க்ஸ்லி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், புழல் சிறையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.நதியா, சிறையில் உள்ள இந்திய கைதிகள் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்படும் நிலையில், டிசம்பர் முதல் வெளிநாட்டு கைதிகள் அவர்களது குடும்பத்துடன் பேச அனுமதிக்கப்படவில்லை. மனுதாரர் உட்பட வெளிநாடுகளை சேர்ந்த 75 கைதிகள் சிறையில் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.