தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம்; தமிழகம் முழுவதும் செப்டம்பரில் அமல் - தமிழக அரசு தகவல்! - Liquor Bottle return Plans

Madras High Court: மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு வரும் என டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 5:25 PM IST

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: அகில இந்திய பாட்டில் வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், மது பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கான டெண்டரில் தங்களையும் இணைக்க வேண்டும், டெண்டரில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டெண்டரில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த ஆன்லைன் டெண்டர் முறை பின்பற்றப்படுகிறது.

பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த பாட்டில் உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே டெண்டர் ஒதுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், பழைய டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தற்போது 10 மாவட்டங்களில் பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், 2024 செப்டம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பழைய டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மனுதாரருக்கு குறைகள் இருந்தால் அரசுக்கு மனு அளிக்கலாம். மேலும், புதிய டெண்டர் அறிவிப்பு குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க :பூட்டிக்கிடந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.. உயிரிழந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க உத்தரவு! - TN Primary Health Center

ABOUT THE AUTHOR

...view details