தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிரைவர் கொலை வழக்கு: அண்ணன், தம்பி உள்பட 6 பேர் கைது! - 6 person arrested

Kunradur Murder Case: குன்றத்தூர் அருகே இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன் தம்பிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Kunradur Murder Case
Kunradur Murder Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 10:44 PM IST

சென்னை: குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம், கம்பர் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 50). இவரது மகன் நிஷாந்த் (வயது 25). லோடு வேன் ஓட்டி வந்தார். கடந்த புதன்கிழமை வீட்டின் அருகே அமர்ந்து செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர்கள் நிசாந்தை ஓட, ஓட விரட்டி படுகொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த அஜித் (வயது 24), அவரது தம்பி கவியரசு (வயது 22), இவர்களது நண்பர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து மாமல்லபுரம் பகுதியில் பதுங்கி இருந்த அஜித், கவியரசு, கார்த்திக் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், "கொலை செய்யப்பட்ட நிஷாந்த் மீது கொலை முயற்சி வழக்கு பதிவாகியிருக்கிறது. கடந்த ஆண்டு அஜித் மற்றும் நிஷாந்த்க்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக அஜித்தை, நிஷாந்த் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் நிசாந்த் சிறைக்கு சென்று வெளியே வந்த நிலையில் இருவருக்கும் இடையே பகையானது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நிஷாந்தை கொலை செய்ய திட்டம் தீட்டிய நிலையில் சம்பவத்தன்று தனியாக இருந்த நிஷாந்தை, அஜித் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து விட்டு அன்றைய இரவு சோமங்கலத்தில் உள்ள காட்டில் பதுங்கி உள்ளனர். பின்னர் அதிகாலையில் எழுந்து மாமல்லபுரம் பகுதியில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

போலீசார் அங்கு வருவதை அறிந்ததும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி செல்ல முயன்றனர். அதன்பின் அவர்களை அங்கேயே மடக்கி பிடித்து கைது செய்தோம். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்தனர்.

மேலும், இவர்கள் தப்பி ஓட முயன்று கீழே விழுந்ததால் கை, கால்களில் எழும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டதாக போலீசார் கூறினர்.

இதையும் படிங்க:நிவாரணத்தை முதலமைச்சரிடமே திருப்பிக் கொடுத்த விவகாரம்.. மீனவரின் விளக்கம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details