தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமலாக்கத்துறை கைது உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் மனுத்தாக்கல்! - Jaffer Sadiq

Jaffer Sadiq: சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 3:55 PM IST

Madras High Court
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் ஜாபர் சாதிக் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடத்தியதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ஆம் தேதி கைது செய்தனர்.

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், போதைப் பொருள் கடத்தல் வழக்குக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தன் மீது தவறான உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டவிரோதமான கைதை சட்டப்பூர்வமாக்கும் வகையில், தனக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை, திகார் சிறையில் உள்ள தன்னை அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்வது தொடர்பாக வாரண்ட் பெற்றுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணையை, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, நாளைக்கு (ஜூலை 5) தள்ளிவைத்துள்ளது.

இதையும் படிங்க:போதைப்பொருள் கடத்தல் வழக்கு; திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக் அமலாக்கத்துறையால் கைது!

ABOUT THE AUTHOR

...view details