சென்னை: காவலர்கள் தாக்கியதில் சிறையில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விவகாரத்தில், மதுக்கரை காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் இரு தலைமை காவலர்கள் மீது ஒழுங்கு நடிவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பிந்து யோகேஷ் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்துள்ள மனுவில், "ஆட்டோ ஓட்டுநரான தனது கணவரை ஹவாலா மோசடி வழக்கில், கோவை மதுக்கரை காவல்துறையினர் சட்ட விரோதமாக கைது செய்தனர். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க உதவி ஆய்வாளர் ரூ.70 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார்.
வழக்கிலுருந்து தனது கணவரை விடுவிப்பதாக கூறிய நிலையில், உடல்நிலை சரியில்லாமல் அவர் சிறையில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் மதுக்கரை காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "கடந்த 2018ஆம் ஆண்டு யோகேஷ் மீது ஐபிசி 395 பிரிவின் கீழ் (மோசடி) வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர், கைது செய்யப்பட்ட இரவு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.