தூத்துக்குடி: முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள எட்டயாபுரத்தில் அதிமுக நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், "திமுக வளர்வதற்கு மிகவும் முக்கிய பங்காற்றியவர் எம்ஜிஆர் தான். அனைத்து மதங்களும் ஒன்று என்று நினைக்கக் கூடிய இயக்கம் அதிமுக, மத நல்லிணக்கத்தைப் போற்றக்கூடிய கட்சி அதிமுக மட்டும் தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாத நிலை இருக்கிறது. 2024ஆம் ஆண்டை தாண்டுவாரா என்பதை இயற்கை தான் முடிவு செய்யும்.
அதிமுக என்ற மாபெரும் இயக்கத்திற்காகத் தவழ்ந்தும், ஒடியும் உழைத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. உதயநிதி போல் எடுத்த எடுப்பிலே அமைச்சர் ஆகிவிடவில்லை. உதயநிதி அமைச்சராகும் முன்பு அவர் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று கூறினார். ஆனால் அமைச்சர் ஆக்கப்பட்டார். தற்போது துணை முதல்வர் பதவி குறித்து வதந்தி பரப்புவதாக முதலமைச்சர் கூறுகிறார். இன்னும் ஆறு மாதத்தில் அந்த ஆட்சி நிற்காது.