திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சமையக்காரனூரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சரவணன். 42 வயதான இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், மண்ணெண்ணெய் திரி கொண்ட குண்டை சரவணன் வீட்டின் போர்டிகோ, கழிவறை, படிக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில், வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்னர், போலீசார் விசாரணையில், சரவணன் வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணை, அதிபெரமனூரைச் சேர்ந்த கதிர்வேல் மகன் அஷ்வின் (21) என்பவர் காதலித்து வந்ததாக தெரிய வந்துள்ளது.