தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 11:17 AM IST

Updated : Jun 29, 2024, 3:30 PM IST

ETV Bharat / state

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் - TN Assembly 2024

Prohibition Amendment Act in TN Assembly 2024: தமிழ்நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் 65 பேர் உயிரிழந்த நிலையில், மதுவிலக்கு திருத்தச் சட்டம் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தால் 10 லட்சம் ரூபாய் அபராதத்துடன் கூறிய கடும் தண்டனை விதிக்க வழிவகை செய்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை குறித்த விவாதம் ஜூன் 20 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி அரசுத் தீர்மானங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

கள்ளச்சாராயம் காய்ச்சினால் ரூ.10 லட்சம் அபராதத்துடன் கடும் தண்டனை: கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், அதை தயாரிப்பது விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், இதன்படி தண்டனை பெறுவோர் அல்லது குற்றம் சாட்டப்பட்டோர் ஜாமீன் கோர முடியாது. அதேநேரம், ஜாமீன் வேண்டும் என்றால் அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் படி விதிகளை மீறி மதுவினை இறக்குமதி செய்துவது, ஏற்றுமதி அருந்துதல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது.

இதேபோல, மனித உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடிய கள்ளச்சாராயத்தை தயாரித்தல், உடைமையில் வைத்திருத்தல், விற்பனை செய்வது போன்று வழக்கமாக ஈடுபடும் குற்றங்களுக்கு வழங்கப்படக் கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கருதிய இச்சட்டத்திருத்தம் கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராய உயிரிழப்புகளைத் தடுக்கும் நடவடிக்கை:தமிழ்நாட்டில் இருந்து கள்ளச்சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்றும் அரசு கருதுகிறது. எனவே தான், கள்ளச்சாராயத்துடன் கலக்கப்படக்கூடிய குடி தன்மை இழந்த எரிசாராயம், மெத்தனால் போன்ற தடை செய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால் கள்ளச்சாரய விற்பனையைத் தடுக்க தண்டனை அதிகரிப்பது அவசியம் என்றும் அரசு கருதுவதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தண்டனை, அபராதம் அதிகரிப்பு:இதற்காக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில் சிறை தண்டனையின் கால அளவை அதிகரித்தும், தண்டனைத் தொகையினுடைய அளவையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுவகை மதி மயக்கக்கூடிய மருந்தினை தயாரிக்க, கொண்டு செல்வதற்கும் வைத்திருப்பதற்கும் நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்த மதுவை அருந்துவதால் மரணம் ஏற்பட்டால், ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையோடு பத்து லட்ச ரூபாய் வரைக்கும் அபராத தண்டனை விதிக்க திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை அணுகலாம்: இதுபோன்று குற்றங்களை செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவரை அந்தப் பகுதியில் இருந்தே நீக்கம் செய்வதற்கு மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறு கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் இதில் ஈடுபடக்கூடிய நபர்கள், பயன்படுத்தக்கூடிய பொருட்கள், இடம் என அனைத்தையும் வரைமுறைப்படுத்தி அதற்கான தண்டனைகளையும், அபராதத் தொகைகளையும் அதிகரித்து மற்றும் அதிகாரிகளுக்கான அதிகாரம் வழங்குவதற்கான வழிவகை செய்ய இச்சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க:LIVE: தமிழ்நாடு சட்டப்பேரவை இன்றைய நிகழ்ச்சிகள் நேரலை - Tamil Nadu Assembly

Last Updated : Jun 29, 2024, 3:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details