சென்னை: அமலாக்கத் துறைக்கு இயக்குநர் பொறுப்பு காலியானதால் அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதையடுத்து சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் மதுரை, கோயம்புத்தூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலர்களும் சென்னை வரவைக்கப்பட்டு அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட முக்கிய வழக்குகள் குறித்தும், முக்கிய அரசியல் பிரமுகர்கள் தொடர்பான வழக்குகள் குறித்தும், அடுத்த கட்டமாக எந்த வழக்குகள் குறித்து ஆதாரங்கள் திரட்டி வருகிறது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.