தமிழ்நாடு

tamil nadu

பி.இ., பி.டெக். படிப்பில் சேர போன் வந்தால் நம்பாதீங்க..! தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை! - bE and BTech admission fake calls

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 1:13 PM IST

bE and BTech admission fake calls alert: பிஇ, பி டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் (கோப்புப்படம்)
தொழில்நுட்ப கல்வி இயக்ககம் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பிஇ, பி டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் எனவும், தரவரிசை பட்டியலுடன் மாணவர்களின் செல்போன் எண்களை இணைத்து வெளியிட்ட சமூக விரோதிகள் மீது சைபர் க்ரைம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொழில்நுட்ப கல்வி ஆணையர் ஆப்ரகாம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணையதளத்தில் விண்ணப்ப பதிவு மே 5ந் தேதி முதல் தொடங்கி ஜூன் 12ந் தேதி வரை பெறப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2,09,645 சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு 1,97,601 தகுதியான மாணவர்களுக்கான வெளியிடப்பட்டது. ஜூலை 10ந் தேதி தரவரிசை பட்டியல் வெளிப்படை தன்மையுடன் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அதிகாரப்பூர்வ இணையதளமான www.tneaonline.org இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் மாணவர்களின் தரவரிசை எண்(Rank), விண்ணப்ப எண்(Application Number), យ (Name), 5 (Date of Birth), L (Aggregate Mark), வகுப்பு (Community) மற்றும் வகுப்பு தரவரிசை எண் (Community Rank) ஆகிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இதில் மாணவர்களின் தொலைபேசி எண்ணோ மற்றும் மாவட்ட விபரமோ எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. மாணவர்களின் நலனுக்காக கொடுக்கப்பட்ட தரவரிசை தகவல்களை சில சமூக விஷமிகள் தங்களது சுயநலத்திற்காக வேண்டி தவறான தொலைபேசி எண் மற்றும் தவறான மாவட்ட விவரங்களைக் கொண்டு மாற்றி அமைத்து வெளியிட்டது தெரிய வருகிறது.

இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மாவட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமான தரவு தளத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களுடன் 88.34 சதவீதம் பொருந்தவில்லை. இது தொடர்பாக சைபர் க்ரைம் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு தரவுகளை தவறாக கையாண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும்.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வ தகவல் சேமிப்பு கட்டமைப்பு firewall, secure socket layer certificate மற்றும் virtual private connection ஆகிய தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் தகவல்கள் சிறிதளவும் கசியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 22 ந் தேதி தொடங்கியது. இதுவரை சிறப்பு இட ஒதுக்கீட்டில் 836 மாணவர்களுக்கும், முதல் சுற்றில் 24,177 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இடங்கள் வெளிப்படைத்தன்மையாக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம். ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் அருகில் உள்ள TFC மையத்தை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் மற்றும் 1800-425-0110 என்ற தொலைபேசி எண் மூலமாகவும் தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்களது விருப்பத்திற்கு ஏற்றது போல் கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை கலந்தாய்வின் மூலம் தேர்வு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது'' என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "மதுவை வாங்கி வீட்டுக்கு சென்று குடியுங்கள்" - உயர் நீதிமன்ற மதுரை கிளை

ABOUT THE AUTHOR

...view details