தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடைமழையால் குளிர்ந்த பூமி! கட்டுமான நிறுவனங்களுக்கு விதித்தத கட்டுப்பாடு அகற்றம் - CONSTRUCTION WORKS IN TN - CONSTRUCTION WORKS IN TN

TN Govt Removed construction works ban: திறந்தவெளி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் கட்டுமான நிறுவனங்களுக்கு விதித்திருந்த கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுள்ளது.

summer and construction related image
வெயில் மற்றும் கட்டுமானம் தொடர்பான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 10:46 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ளவே பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மற்றும் மதுரையில் மே மாதத்தின் இறுதிவரை ஒவ்வொரு நாள் காலை 10 மணி வரை மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் நேற்று உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்நடைமுறை மே மாதம் 2024 இறுதி வரை கடைபிடிக்கப்படவேண்டும்.

இணை இயக்குநர்கள்(BOCW) மேற்கூறிய அறிவுரைகள் கட்டுமான நிறுவனங்களால் பின்பற்றப்படுவதை இணை இயக்குநர்கள் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில், திறந்தவெளி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று தொழிலக பாதுகாப்பு இயக்ககம் விதித்திருந்த கட்டுப்பாட்டை இன்று திரும்ப பெற்றுள்ளது.

இதுகுறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் “தமிழ்நாட்டில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம் போல், கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம். மீண்டும் வெப்ப அலையின் பாதிப்பு தொடங்கி உச்சம் தொடும் வரை கட்டுமான பணிகளை, தங்களது கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்” என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கோடை வெயிலுக்கு மத்தியில் கொட்டித் தீர்த்த மழை.. நெல்லை மக்கள் மகிழ்ச்சி! - Heavy Rain In Nellai

ABOUT THE AUTHOR

...view details