தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கைத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகளுடன் காரில் வந்த கண்ணபிரான் அதிரடி கைது.. நெல்லையில் பரபரப்பு!

கைத்துப்பாக்கி, அரிவாள், நாட்டு வெடிகுண்டுகளுடன் காரில் வந்த தேவேந்திரகுல எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான் உள்பட 14 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

கைது செய்யப்பட்ட கண்ணபிரான் (கோப்புப்படம்)
கைது செய்யப்பட்ட கண்ணபிரான் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியைச் சார்ந்தவர் கண்ணபிரான். தேவேந்திரகுல எழுச்சி இயக்க தலைவராக உள்ளார். இவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், 15க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் தச்சநல்லூரில் இருந்து சொந்த வேலையாக திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி பகுதிக்கு அவர் தனது ஆதரவாளர்களுடன் இரண்டு கார்களில் சென்று கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

அப்போது தாலுகா காவல் நிலைய எல்லையில் தாழையூத்து டி.எஸ்.பி ரகுபதி ராஜா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கண்ணபிரான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயணித்த இரண்டு கார்களை நிறுத்தி சோதனையிட்டு உள்ளனர். அதில் ஒரு கை துப்பாக்கி, 5 அரிவாள்கள், நான்கு நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவை அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - தேனி கோர்ட் அதிரடி..!

மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தும் வகையில் வேறு சில ஆயுதங்களும் இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனை அடுத்து கண்ணபிரான் மற்றும் அவரோடு பயணித்த 14 ஆதரவாளர்கள் கைது செய்த போலீசார், அவர்கள் மீது கொடிய ஆயுதங்கள் வைத்திருத்தல், பொதுமக்களுக்கு அச்சம் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தற்காப்பிற்காக ஆயுதங்கள் வைத்திருந்தார்களா அல்லது வேறு யாரேனையும் கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களை எடுத்துச் சென்றார்களா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலீசாரின் வாகன சோதனையில் கை துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details