தமிழ்நாடு

tamil nadu

"என் இறப்புக்கு கடன் வாங்கியவர்கள் தான் காரணம்" - காண்ட்ரக்டர் விபரீத முடிவு! - contractor commits suicide

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 9, 2024, 9:49 PM IST

Suicide: பொள்ளாச்சியில் கடனாக கொடுத்த பணத்தை கடன் வாங்கியவர்கள் திருப்பி தராததால், கடன் கொடுத்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை செய்து கொண்டவர்
தற்கொலை செய்து கொண்டவர் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காண்ட்ராக்டர் சக்தி குமார் (45). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சக்தி குமார் சமத்தூரைச் சேர்ந்த கணேசமூர்த்திக்கு ரூ.2,50,000, கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த சாதிக் பாஷாவுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும் மற்றும் ஆவல் சின்னாம்பாளையத்தை சேர்ந்த செந்தில்நாதனுக்கு ரூ.8,00,000 பணம் கடனாக கொடுத்ததாக தெரிகிறது.

அப்பணத்தை திருப்பி கேட்டபோது மூவரும் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தி அடைந்த சக்தி குமார் தனது சாவிற்கு தன்னிடம் கடன் வாங்கி திருப்பி தராத மூவரும் தான் காரணம் என செல்போனில் வீடியோ பதிவு செய்து அதனை வாட்ஸ் ஆப் மூலம் தனது உறவினர்களுக்கு அனுப்பி விட்டு ராமர் கோயில் வீதியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலையை விடுக (Credits - ETV Bharat Tamil Nadu)

இது குறித்த தகவல் அறிந்து வந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார் சக்தி குமார் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:ரவுடி துரைசாமியின் என்கவுண்டர் வழக்கை கோட்டாட்சியர் விசாரணை நடத்த இடைக்கால தடை! - Rowdy Duraisamy Encounter Case

ABOUT THE AUTHOR

...view details