தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தொடரும் மாணவர்களின் அத்துமீறல்.. மாநகரப் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி அட்டகாசம்!

சென்னை, கிண்டி செல்லம்மாள் கல்லூரி அருகே 88K தடம் எண் கொண்ட மாநகரப் பேருந்தில், கல்லூரி மாணவர்கள் ஏறி அராஜகத்தில் ஈடுபட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 10:56 PM IST

மாநகரப் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி அராஜகம் செய்யும் மாணவர்கள்
மாநகரப் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி அராஜகம் செய்யும் மாணவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:சென்னை தியாகராய நகரிலிருந்து குன்றத்தூர் வரை 88K தடம் எண் கொண்ட மாநகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்தானது இன்று மதியம் வழக்கம் போல குன்றத்தூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, செல்லம்மாள் கல்லூரி அருகே 30க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறி உள்ளனர்.

இதில், சில மாணவர்கள் மட்டும் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த தகவல் கிண்டி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். போலீசாரைக் கண்டதும் உடனடியாக கல்லூரி மாணவர்கள் கீழே இறங்கி கலைந்து சென்றனர். சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக மாணவர்கள் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அராஜகம் செய்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

பேருந்தின் மேற்கூரை மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நந்தனம் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் என போலீசார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. ரூட்டு தல பிரச்னையில் மாநில கல்லூரி மாணவரை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இணைந்து தாக்கி கொலை செய்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் கல்லூரி மாணவர்கள் பேருந்து மேற்கூரை மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநகரப் பேருந்தின் மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க :ரூட்டு தல மோதலால் நிகழ்ந்த கொலை! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

சென்னையில் ரூட்டு தல விவகாரத்தில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை தண்டனைக் கிடைக்கும் வகையில், புதிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ரயில் நிலையங்கள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் இருப்பதால் பிரச்னைகளில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details