திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார், கடந்த மே 4ஆம் தேதி அவருடைய வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அதனை அடுத்து, சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஜெயக்குமாரின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில், 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவ்வழக்கை புலனாய்வு செய்ய கூடுதல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். அதேநேரம், ஜெயக்குமார் எழுதியதாகக் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பலருக்கும் சம்மன் அனுப்பி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயக்குமார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் புலன் விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட தனிப்படைகள், திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குச் சென்றும் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க:கை மாறிய ஜெயக்குமார் வழக்கு.. களத்தில் இறங்கியது சிபிசிஐடி.. விறுவிறுப்பாகுமா விசாரணை?