தமிழ்நாடு

tamil nadu

டாஸ்மாக் சரக்கில் ‘கிக்’ இல்லை என கூறுவது உண்மை.. அண்ணாமலை பேச்சு! - bjp annamalai

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 9:22 PM IST

Updated : Jun 30, 2024, 9:30 PM IST

BJP Annamalai: டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை என தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ள நிலையில், "டாஸ்மாக் மதுபானம் தரமானதாக இல்லை, கிக் இல்லை என அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை, அமைச்சர் துரைமுருகன் புகைப்படம்
அண்ணாமலை மற்றும் அமைச்சர் துரைமுருகன் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்:தமிழ்நாடு முழுவதும் பாஜக போட்டியிட்ட இடங்களில் கட்சியின் செயலாக்கத்தை, அக்கட்சியின் தலைவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அவிநாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று கோவை நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்களைச் சந்தித்தார்.

பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேட்பாளராக பங்கு கொள்வதற்காக கோவைக்கு வந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “மத்திய அரசு, சுதந்திரமாக இயங்கும் சிஏஜி அமைப்பு ஆய்வு செய்து, நிதி வெளிப்படைத்தன்மை குறித்து தணிக்கை செய்வார்கள். தமிழ்நாட்டில் டாஸ்மாக்கிற்கு வரக்கூடிய வருமானம் வெளிப்படையாக இல்லை என அறிக்கை வழங்கியுள்ளது. டாஸ்மாக்கின் ஆண்டு அறிக்கை எடுப்பதே மிகவும் சிரமம். அதனால் சிஏஜி அறிக்கை ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அமைச்சர் துரைமுருகன் அரசு மதுபானத்தில் கிக் இல்லை என்று சொன்னதை நகைச்சுவையாக சொன்னாலும், நான் கள்ளக்குறிச்சிக்கு சென்றபோது, டாஸ்மாக் தரம் குறைவாக உள்ளது, தண்ணீரைப் போல உள்ளது என்று பலர் கூறினர். டாஸ்மாக் போதை அதிகமாக வேண்டும் என்பதால் கள்ளச்சாராயம், போதைப்பொருள் நோக்கிச் செல்வதாக கூறினார்கள்.

டாஸ்மாக் மதுவின் தர ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான். அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக சொல்லி இருந்தாலும், அது உண்மை. ஒரு மூத்த அமைச்சரே சட்டமன்றத்தில் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அரசு வேலை செய்யவில்லை, அரசு தவறாக வேலை செய்கிறது.

காவல்துறை பயணப்படி:தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு சிறப்பு ஊதியம் தமிழக அரசால் இன்னும் கொடுக்கவில்லை. கள்ளச்சாராய மரணங்களுக்கு 10 லட்சம் கொடுக்கும் தமிழக அரசு, மக்களுக்குக்காக போராடும் காவல்துறைக்கு இன்னும் பயணப்படி தரவில்லை.

சென்னையில் சுகாதாரமற்ற குடிநீரால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அடிப்படை சுகாதாரம் அதளபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றது. ஆனால், இது பற்றி சட்டப்பேரவையில் விவாதம் நடப்பது இல்லை. இது பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் பேசுவது இல்லை.

முதலமைச்சர் வெளிநாடு பயணம்:முதலமைச்சர் வெளிநாடு செல்வது, எந்த விதத்திலும் தவறு கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சர் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கொடுக்காமல் இருப்பது கேள்வியை எழுப்புகிறது. பொதுமக்கள் வரிப்பணத்தில் செல்லும் முதலமைச்சர் பயணத்தால் மேற்கொண்டது ஜீரோ.

தவெக தலைவர் விஜய் படித்த நல்ல தலைவர்கள் வேண்டும் என்று கூறியது குறித்த கேள்விக்கு, அனைத்து இடங்களிலும் தலைவர்கள் உள்ளனர். குறைவாக உள்ளனர், அதிக தலைவர்கள் வேண்டும் என்பது தான் தவெக தலைவர் விஜய் கருத்து” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க:“டாஸ்மாக்கில் தரம் இல்லை என்பதை அமைச்சரே கூறுகிறார்” - பிரேமலதா விஜயகாந்த் தாக்கு!

Last Updated : Jun 30, 2024, 9:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details