தூத்துக்குடி: கணவன் இறந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக நம்ப வைத்து பழகிவிட்டு ஏமாற்றிய திமுக பிரமுகர் மீது போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சாயர்புரம் நகர தி.மு.க. செயலாளராக இருந்து வருபவர் கண்ணன். இவர் என்.வி.கே. டிரேடரஸ் என்ற பெயரில் கடையும், இ.சேவை மையமும் நடத்தி வருகிறார். இவரது கடையில், சாயர்புரம் நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 34 வயதான கைம்பெண் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு கணவர் இறந்த நிலையில், குழந்தையுடன் பெற்றோர் பராமரிப்பில் வசித்து வந்த அப்பெண்ணிடம் கண்ணன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருங்கி பழகி உள்ளார். மேலும், திருமணம் செய்து கொள்வதாக கூறிய கண்ணன் அப்பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், உறவில் இருந்து திடீரென பின்வாங்கிய கண்ணன், நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பெண்ணை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.