தூத்துக்குடி: கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தூத்துக்குடி, பக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரமுத்து மகன் வடிவேல் முருகன் (28) என்பவர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெடி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து செந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் இசக்கிமுத்து (32), தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பக்கப்பட்டியை சேர்ந்தவர்களான சுப்பையா என்பவரது மனைவி லெட்சுமி (55), சுப்பையாவின் மகன்களான சின்னதம்பி (25), மாரிமுத்து (28), புதியம்புத்தூர் மேல வேலாயுதபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் பிரவீன்குமார் (21), திருநெல்வேலி மாவட்டம் சொக்கட்டன்தோப்பு பகுதியை சேர்ந்த குமார் மகன் ஆறுமுகம் (எ) அலெக்ஸ் (23), திருநெல்வேலி மாவட்டம் திருமலைகொழுந்துபுரம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் பிரவீன் (26) மற்றும் தூத்துக்குடி தாளமுத்துநகர் மேல அழகாபுரி பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் விஜய் (29) ஆகியோர் புதுக்கோட்டைக் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.