தமிழ்நாடு

tamil nadu

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்.. யார் தெரியுமா? - IDream Tiruppur Tamizhans

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 6:43 PM IST

IDream Tiruppur Tamizhans: ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் புதிய கேப்டனாக சாய் கிஷோர் நியமனம் செய்யப்பட்டதாக அணியின் உரிமையாளர் ரிஷிகேஷ் ஸ்ரீராம் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி வீரர்கள்
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி வீரர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோவை: கோவை விமான நிலையம் அருகில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டிஎன்பில் தொடரில் பங்குபெறும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்திய கிரிக்கெட் வீரர்களான நடராஜன், சாய் கிஷோர், விஜய்சங்கர், அணியின் உரிமையாளர் ரிஷிகேஷ் ஸ்ரீராம் மூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது பேசிய அணியின் உரிமையாளர் ரிஷிகேஷ் ஸ்ரீராம் மூர்த்தி, “இந்த அணியின் கேப்டன் விஜய்சங்கருக்கு கடைசி ஆட்டத்தின் போது காயம் ஏற்பட்டதால் சாய் கிஷோரை புதிய கேப்டனாக நியமிப்பதாக தெரிவித்தார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் தற்பொழுது நன்கு விளையாடி வருவதாக தெரிவித்த அவர், ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருந்து ஆண் விளையாட்டு வீரர்கள் எப்படி முன்னேறி நாட்டிற்காக விளையாடுகிறார்களோ, அதே போன்று பெண்களுக்கும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்த TNC முன்னெடுப்பை எடுத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

விஜய் சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உடலில் காயம் ஏற்பட்டதால் சில தினங்களுக்கு விளையாட முடியாது எனவும், இனி வரும் நாட்களில் சாய் கிஷோர் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்துவார் எனக் கூறினார். மேலும், அணியில் உள்ளவர்கள் தாமாக பொறுப்பேற்றுக் கொண்டு விளையாடினேலே போதுமானது" என தெரிவித்தார்.

சாய் கிஷோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்த அணியை இதற்கு முன்னால் இருந்தவர்கள் நன்கு வழிநடத்திச் சென்று உள்ளார்கள் எனவும், அணியில் திறமையான மூத்த வீரர்கள் இருப்பதால் தனக்கு கிடைத்த அனுபவங்களையும் திறமைமிக்க வீரர்களையும் கொண்டு இந்த அணியை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.

மேலும், விளையாட்டிலும் சரி, வாழ்க்கையிலும் சரி சேலஞ்சு இருந்தால் தான் கிக் இருக்கும் என தெரிவித்த அவர், அனைத்தும் எளிதாக இருந்தால் திறமை தேவைப்படாது எனக் கூறினார். மேலும், கோயம்புத்தூர் எப்பொழுதும் அதிர்ஷ்ட இடமாக இருந்து உள்ளதாகவும், கண்டிப்பாக இங்கு ஒரு நல்ல வைப்ரேஷன் இருக்கும் என தெரிவித்தார்.

மேலும், கோவையை பொறுத்தவரை மைதானம் நன்றாக இருக்கும் என தெரிவித்த அவர், இருப்பினும், என்னதான் நாம் பழகி இருந்தாலும் அப்போதைய சூழல் முடிவை அப்போது தான் எடுக்க முடியும் என தெரிவித்தார். கோவையை ஒரு கிரிக்கெட்டிங் ஹப் என கூறிய அவர், கோவை மக்கள் கிரிக்கெட்டுக்கு நல்ல வரவேற்பளிக்கிறார்கள்" என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடராஜன், "அணி நன்றாக இருப்பதாகவும், இரண்டு முறை தோல்வியைச் சந்தித்து இருந்தாலும் அணியின் அட்மாஸ்பியர் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். ஒரு சில இடங்களில் பிரஷர் காரணமாக தவறுகள் நடந்திருப்பதாக தெரிவித்த அவர், அதனை இனிவரும் ஆட்டங்களில் சரி செய்தால் வெற்றிக்கான வாய்ப்புகள் கிடைக்கும் எனவும், அதற்காகத்தான் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வானது குறித்து பேசிய விஜய் சங்கர், "இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவி ஏற்றது இந்திய அணிக்கு சாதகமான ஒன்றுதான் எனவும், அனைத்து மக்களைப் போன்றே தாங்களும் அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்பதற்கு ஆர்வமாக காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறுவது வழக்கமான ஒரு நடைமுறைதான் எனவும், ஒருவர் சென்றால் அந்த இடத்திற்கு மற்றொருவர் வந்து தான் ஆக வேண்டும்" என பதிலளித்தார். டிஎன்பிஎல் தொடரை தாண்டி இந்திய அணி குறித்த கேள்விகளுக்கு நடராஜன் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

இதையும் படிங்க:இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி... கம்பீருக்கு காத்திருக்கும் சவால்!

ABOUT THE AUTHOR

...view details