தமிழ்நாடு

tamil nadu

முதல் பதக்கம் வெல்லும் முனைப்பில் இந்தியா.. மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி! - paris olympics 2024

By PTI

Published : Jul 27, 2024, 6:26 PM IST

Updated : Jul 27, 2024, 7:42 PM IST

Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீரர் மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

மனு பாக்கர்
மனு பாக்கர் (Credits - AP photo)

பாரிஸ்:ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இதில் 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவின் சார்பாக மட்டும் மொத்தம் 16 பிரிவுகளில் 117 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவிற்கான தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் மற்றும் சந்தீப் சிங் ஜோடியும், ரமிதா மற்றும் பபுதா அர்ஜூன் ஜோடியும் பங்கேற்றனர். இந்த சுற்றில் ரமிதா- பபுதா அர்ஜூன் ஜோடி 628.7 புள்ளிகளுடன் 6ம் இடத்தையும், மற்றொரு ஜோடியான இளவேனில் வாலறிவன் - சந்தீப் சிங் ஜோடி 626.3 புள்ளிகளுடன் 12வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இதனைத் தொடர்ந்து, 10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் நடைபெற்றது. முதல் 8 இடங்களை பெறுபவர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இதில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் சார்பாக சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் பங்கேற்றனர். இருவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் தகுதியை இழந்தனர். அடுத்ததாக மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாக மனுபாக்கர் மற்றும் ரிதம் சிங்வான் ஆகியோர் களமிறங்கினர்.

இவர்களில் ரிதம் சங்வான் 573 புள்ளிகள் பெற்று 15வது இடத்தை மட்டுமே அவரால் பெற முடிந்தது. இதனால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். இருப்பினும், தொடக்கம் முதலே முன்னிலை வகித்த மனு பாக்கர் 60 ஷாட்டுகள் கொண்ட தகுதிச் சுற்றில் 580 புள்ளிகளைப் பெற்று 3வது இடத்தில் போட்டியை நிறைவு செய்தார். மனு பாக்கர் மொத்தம் ஆறு தொடரின் முறையே 97, 97, 98, 96, 96 மற்றும் 96 மதிப்பெண்களைப் பெற்றார்.

இதன் மூலம் மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் இந்தியாவுக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்நிலையில், மகளிர் 10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆரம்பமே அதிரடி..ஒலிம்பிக் வில்வித்தை போட்டி..காலிறுதியில் இந்திய ஆடவர் அணி!

Last Updated : Jul 27, 2024, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details