தமிழ்நாடு

tamil nadu

பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய பி.வி.சிந்து.. சீன வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வி! - Paris Olympics 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 10:32 AM IST

Paris Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

பிவி சிந்து
பிவி சிந்து (Credits - AFP)

பாரீஸ்:பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கடந்த மாதம் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. அனைத்து வெண்கலப் பதுக்கங்களுமே துப்பாக்கி சுடுதல் போட்டியின் மூலம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஜூலை 31ஆம் தேதி நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, எஸ்தோனியா வீராங்கனை கிறிஸ்டின் குபாவை எதிகொண்டார். இந்த போட்டியில் பிவி சிந்து 21-5, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்று பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதற்கு முந்தைய சுற்றில் அவர் மாலத்தீவு வீராங்கனை பாத்திமா நபாஹாவை 21-9, 21-9 என்ற நேர் செட்டில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நேற்று நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் 6ஆவது நாள் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சீனாவின் ஹி பிங்க்ஜியோவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 19-21 என்ற கணக்கில் பிவி சிந்து இழந்தார். இதனையடுத்து 2 ஆவது செட்டையும் 14-21 என்ற கணக்கில் இழந்து தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விழங்கப்பட்ட பிவி சிந்து காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து எலிமினேட்டர் சுற்றோடு வெளியேறினார். பிவி சிந்து 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை பிவி சிந்து வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த இரு ஒலிம்பிக் தொடர்களிலும் இந்தியாவுக்கு பதக்கம் பெற்று தந்த பிவி சிந்து பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் லக்‌ஷயா சென் 16ஆவது சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதையடுத்து இன்று நடைபெறும் காலிறுதிப்போட்டியில் லக்‌ஷயா சென் தைவான் நாட்டை சேர்ந்த சோ டியான் உடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக்: 7வது நாளில் தமிழக வீரர், வீராங்கனைகள் சாதிப்பார்களா?

ABOUT THE AUTHOR

...view details