தமிழ்நாடு

tamil nadu

ஒலிம்பிக் கால்இறுதிக்கு இந்திய வில்வித்தை அணி தகுதி! சாதித்தது எப்படி? - Paris Olympics 2024

By ETV Bharat Sports Team

Published : Aug 2, 2024, 1:47 PM IST

பாரீஸ் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா, அங்கிதா பகத் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Etv Bharat
Dheeraj Bommadevara and Ankita Bhakat (AP)

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஆக.2) நடைபெற்ற கலப்பு இரட்டை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா, அங்கித் பகத் இணை இந்தோனேஷியாவின் ஆரிப் பங்கஸ்து, தியானந்தா சொய்ருனிசா இணையை எதிர்கொண்டது.

ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்டு வந்த இந்திய இணை, இந்தோனேஷியா ஜோடிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. தீரஜ் மொம்மதேவரா நேர்த்தியா அம்புகளை எய்து புள்ளிகளை பெற்றுத் தந்தார். தொடர்ந்து இரண்டாவது செட்டில் அங்கிதா பகத் சிறப்பாக விளையாடினார். இருவரது வேகத்திற்கு இந்தோனேஷிய ஜோடியால் ஈடுகொடுக்க முடியாமல் கடைசியில் தோல்வியை தழுவியது.

இந்திய இணை தீரஜ் பொம்மதேவரா - அங்கிதா பகத் 5-க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இதையும் படிங்க:ஒரு மேட்ச் ஜெயிச்சா.. புது சாதனை படைக்கும் இந்தியா! இலங்கை விட்டுக் கொடுக்குமா? - India vs SriLanka 1st ODI

ABOUT THE AUTHOR

...view details