நியூயார்க் : 2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு அறிக்கையின்படி போர் உள்ளிட்ட சிக்கலான தன்மை கொண்ட நாடுகளில் வசிக்கும் 45.50 கோடி மக்கள் வறுமையின் கோரப்பிடியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு அறிக்கையை ஐநா வளர்ச்சி திட்டம், ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள முன்னெடுப்பு முயற்சி ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கையின்படி உலகில் உள்ள 110 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருப்பது தெரியவந்துள்ளது. போர், அமைதியின்மை நிலவும் நாடுகளில் வசிக்கும் 40 சதவிகித மக்கள் வறுமையின் கோரப்பிடியில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் நடக்கும் நாடுகளில் வசிக்கும் ஏழைகளில் நான்கு பேரில் ஒருவர் மின்வசதி இன்றி இருப்பதாக தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் போர் உள்ளிட்ட சிக்கல்கள் இல்லாத நாடுகளில் வசிக்கும் 20 ஏழைகளில் ஒருவர் மட்டுமே மின்வசதி இன்றி இருக்கின்றனர். இதே போல போர் நடக்கும் நாடுகளில் குழந்தைகள் கல்வி 4.4 சதவிகிதம், சத்துணவு .7.2 சதவிகிதம்,குழந்தை இறப்பு விகிதம் 1.1 சதவிகிதம் என இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
இதையும் படிங்க :வளர்ச்சிக்கான திட்டத்தில் இந்தியாவின் இடர்பாடு: வறுமை ஒழிப்பா? அதிகரிக்கும் பொருளாதார சமத்துவமின்மையா?