தமிழ்நாடு

tamil nadu

"இது கட்டப்பஞ்சாயத்து தான்" - ரத்னம் பட விவகாரத்தில் விஷால் ஆவேச ஆடியோ வெளியீடு! - rathnam movie release issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 3:53 PM IST

Updated : Apr 25, 2024, 4:53 PM IST

Rathnam movie release issue: நாளை ரத்னம் படம் வெளியாக உள்ள நிலையில், திருச்சி, தஞ்சை பகுதியில் படத்தை திரையிட தியேட்டர் தரவில்லை எனவும், தியேட்டரை ஒதுக்காமல் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கட்டப்பஞ்சாயத்து செய்கிறது எனவும் நடிகர் விஷால் ஆடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார்.

Rathnam movie release issue
Rathnam movie release issue

Rathnam movie release issue

சென்னை:இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் படம் நாளை (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், தற்போது வரை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் முன்பதிவு தொடங்கவில்லை. சென்னையில் ஒருசில திரையரங்குகளில் மட்டுமே புக்கிங் தொடங்கியுள்ளது.

அதிலும், கமலா திரையரங்கில் பெரிய திரையில் விஜயின் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், இப்படம் தற்போது வரை ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி வருவதால், நாளையும் மூன்று காட்சிகள் ஃபுல்லாகி உள்ளது. இதனால் கில்லி திரைப்படம் பெரிய திரையில் போடப்பட்டுள்ளது. விஷாலின் ரத்னம் படம் சிறிய திரையில் போடப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்தில் நடிகர் விஷால் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பற்றி பேசியிருந்தார். இந்த நிலையில், நடிகர் விஷால் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், திருச்சி, தஞ்சாவூர் திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிதம்பரம், மீனாட்சி ஆகியோரை எதிர்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், “நான் பணம் பாக்கி வைத்துள்ளதாக ஒருவர் கடிதம் அளித்துள்ளார். அவர் உங்கள் சங்கத்தின் உறுப்பினர் கூட இல்லை. அந்த கடிதத்தில் நான் பணம் தரவேண்டும் என்ற ஆதாரமும், முகாந்திரமும் இல்லை. அதனை வைத்துக்கொண்டு எனது படத்தை வெளியிடாமல் என்னை சுத்தலில் விடுகிறீர்கள். எனக்கும், அந்த நபருக்கும் சம்பந்தம் கிடையாது. நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்.

ஒருவேளை நான் பணம் பாக்கி வைத்திருந்தால் அது ஒப்பந்தம் ஆகியுள்ளதா? ஆதாரம் தேவை. பொதுவான ஆதாரம் இல்லாமல் ஒரு கடிதத்தை மட்டும் வைத்துக்கொண்டு படத்தை போடக்கூடாது என்கிறீர்கள். ஒரு நடிகன் விஷாலாக பேசுகிறேன். சிதம்பரத்தை நான் தொடர்பு கொண்டால் எனது போனை எடுக்கவில்லை. ஒருபடம் வெளியாவதே பெரிய விஷயம். இந்த நேரத்தில் நீங்கள் இப்படி செய்வது கட்டப்பஞ்சாயத்து.

இதுகுறித்து முதலமைச்சர், திருச்சி மாவட்ட ஆட்சியர், போலீஸ் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது, நீங்கள் செய்வது கட்டப்பஞ்சாயத்து தான். நான் கோபத்தில் சொல்வதாக நினைக்க வேண்டாம். விஷாலுக்கே இந்த கதி என்றால், புதுமுக நடிகர்களுக்கு என்ன கதி என்பதை தெரியப்படுத்த வேண்டியது என்னுடைய கட்டாயம், கடமை.

வெள்ளிக்கிழமை படம் வெளியாகாமல் இருப்பது உங்களின் அலட்சியம் தான். அதனைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன். ஆதாரம் இல்லாத கடிதத்துக்கு ஏன் நீங்கள் இத்தனை முக்கியத்துவம் கொடுக்குறீர்கள்? நம் நாட்டில் கட்டப்பஞ்சாயத்துக்கு என்ன சட்டம், என்ன நடவடிக்கை என்று உங்களுக்கும் தெரியும்.

நான் கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி உழைக்கும் ஒரு நடிகன். யாருடைய உழைப்புடனும் விளையாடாதீர்கள். இதனை நான் விட்டுவிடமாட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குக் வித் கோமாளி சீசன் 5.. நடுவர் மாற்றம்.. களமிறங்கும் புதிய பிரபலங்கள்! - Cook With Comali Season 5

Last Updated : Apr 25, 2024, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details